அறிவித்தல்

Mariaholm 2020 அறிவித்தல்

புனித மரியன்னையின் திருவிழா பற்றிய செயற்பாட்டுக் குழுவினரின் அறிவித்தல்!!!


கொரோனா (Korona) தொற்றுநோய் காரணத்தால் இவ்வருடம் மரியன்னையின் புனித யாத்திரை, இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவாக மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம் பெறுகின்றது என்பதை வருத்தத்துடன் அறியத்தருகிறோம்.
நோர்வே சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமையவே விழாச் செயற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பபட்டுள்ளது.
அந்த வகையில் அதிக பட்சமாக 200 பேர் மட்டுமே திருவிழா நிகழ்வில் கலந்து கொள்ள முடியும் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
புனித மரியன்னையின் யாத்திரைக்கான பதிவுகள் அனைத்தும் பூர்த்தியான நிலையில், இதற்க்கு மேல் பதிவுகளை மேற்கொள்ளாத எவரும் யாத்திரை ஸ்தலத்தினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதனை மிகவும் மனவேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னையின் திருவிழா எமது TKSOA-Facebook ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது என்பதனையும் இத்தருணத்தில் அறியத்தருகின்றோம்.
அன்னை மரியின் விழா சிறப்புற உங்கள் அனைவரினதும் ஒத்தாசையை வேண்டி நிற்கிறோம்.
மேலதிக விபரங்களுக்கு www.nortamilkat.no
Facebook: TKSOA
Generell informasjon om korona på tamilsk. (FHI)
Råd og informasjon til risikogrupper. (FHI)


இங்கனம்,
Mariaholm மரியன்னை செயற்பாட்டுக் குழுவினர்
தொடர்புகள் :
அன்ரன் அமரபாலா tlf.91113645
மகேந்திரன் மரியாம்பிள்ளை tlf.94347292