அறிவித்தல்

எமது ஆலய வழிபாட்டுச் செயற்பாடுகள்.

[ lørdag 5. desember 2020 20.57 ] Amarapala: இறை யேசுவின் அன்பு விசுவாசிகளே!

எமது ஆலய வழிபாட்டுச் செயற்பாடுகள் யாவும் கொரோனா வைரசின் தாக்கத்தால் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது அறிந்ததே.

நோர்வே சுகாதார அமைப்பினரின் வழிகாட்டி அறிவுறுத்தல்கள், எமது ஆலய வழிபாடுகளை முன்னெடுக்க சாதகமாக அமையப்பெறின், நந்தார் மற்றும் புத்தாண்டுக்கான ஆலயத் திருப்பலி வழிபாட்டுகளை பின்வரும் நாட்களில் நடாத்தத் திட்டமிட்டுள்ளோம்.

திருபலிக்கான நேர அட்டவணை பின்வருமாறு
24.12.20 வியாழக்கிழமை (julaften) kl 17.00. மணிக்கும்,
27.12.20 ஞாயிறு kl. 17.30 மணிக்கும்,
31.12.20 வியாழக்கிழமை (nyttårsaften) kl. 19.30. மணிக்கும்
01.01.21 வெள்ளிக்கிழமை nyttårsdag kl. 17.00 மணிக்கும் திருப்பலிகள் St. Johannes ஆலயத்தில் ஒப்புக் கொடுக்கப்படும்.

மேற்படி திருப்பலிகள் அனைத்தும் நோர்வே சுகாதார அமைப்பினர் இறுதிக் கணத்தில் எடுக்கும் சாதகமான முடிவிலேயே தங்கியுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

நத்தார் மற்றும் புத்தாண்டு ஆராதனைகள் ஆலயத்தில் இடம் பெற வேண்டும் என்பதே எம் அனைவரினதும் பேராவலாகவுள்ளது.
எமது விண்ணப்பங்கள் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை இரைஞ்சி வேண்டுவோம்.

மேலும் திருப்பலி தொடர்பான மேலதிக விபரங்களும், திருப்பலி வேளைகளில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்களும் பின்னர் அறியத்தரப்படும்.

நன்றி..

தமிழ் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ- வீக்கன். நிர்வாகம் © 2020