அறிவித்தல்

திருவருகைகால அறிவித்தல்

[ torsdag 17. desember 2020 18.23 ] Amarapala: இறையேசுவில் பற்றும் பாசமும் கொண்ட எமது பங்கு மக்களே !

யேசுபாலகனின் பிறப்பினை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவ் வேளையில், உங்கள் அனைவருடனும் ஒரு மகிழ்வான செய்தியை பகிர்ந்து கொள்வதில் திருப்தியடைகிறோம்.

எமது பங்கு மக்களின் ஆன்மீகத் தேவையை உணர்ந்த நாம், தொடர்ச்சியாக மதிப்பிற்குரிய அருட்தந்தை ஜெகத் மற்றும் அருட்தந்தை பிராங்கிலின் அவர்களுடனும் சந்திப்புக்கள் மேற்கொண்டோம். இவ் நிறைவான சந்திப்புக்களின் பலனாக, இரண்டு குருவானவர்களும் எமது வேண்டுகோளை ஏகமனதாக ஏற்று, தமிழில் குறிப்பிட்ட தினங்களில் திருப்பலிகளை நிறைவேற்ற சம்மதம் அளித்துள்ளனர் என்ற மகிழ்ச்சியான தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

20.12.2020 – Søndag, kl. 17.00 – St Johannes Kirke
24.12.2020 – Julaften kl 17 00 – St Johannes Kirke
24.12.2020– Julaften kl. 17 00 – St. Olav Domkirke
25.12.2020 –¬ Juledag kl. 17 00 – St. Olav Domkirke
31.12.2020 – Nyttårs aften kl. 19 30- St Johannes Kirke
01.01.2021 – Nyttårsdag kl 17 00 – St Johannes Kirke
01.01.2021 – Nyttårsdag kl. 19 00- St. Joseph Kirke
03.01.2021 – Søndag kl. 17 00 – St Johannes Kirke

திருப்பலிகள் St.Johaness, St.Olav, St.Joseph ஆகிய தேவாலங்களில் நிறைவேற்றப்படும் என்பதைக் கவனத்திற் கொள்ளவும். மேலும் ஒவ்வொரு திருப்பலியிலும் 20 பக்தர்கள் மட்டுமே பங்குபெற முடியும் என்ற தகவலையும் கவனத்தில் ஏற்கவும். ஏற்கனவே நடைமுறையில் உள்ளது போன்று, திருப்பலி நடைபெறும் நாளுக்கு சரியாக ஒரு வாரம் முன்பாக billett.katolsk.no என்னும் இணைய முகவரியில் பதிவுகள் இடம்பெறும் என்பதையும் குறித்துக் கொள்ளவும்.

இன்றைய இக்கட்டான இவ்வேளையில் நடைபெறவுள்ள திருப்பலிகளில் பலரும் பங்குபெற ஏதுவான வகையிலும், யேசுபாலனை தரிசிக்க பலரும் ஆவலாக உள்ளதையும் கருத்திற் கொண்டு, எமது சகஉறவுகளையும் மனதிற் கொண்டு உங்கள் முன்பதிவுகளைச் செய்யுமாறு வினயமாக வேண்டி நிற்கிறோம்.

இதேவேளை எமது ஆன்மீகத் தேவைகளை இனம் கண்ட மதிப்பிற்குரிய அருட்தந்தையினர் ஜெகத் மற்றும் பிராங்கிளின் ஆகிய இரண்டு குருவானவர்களுக்கும் எமது பங்குமக்கள் சார்பிலும் ஒஸ்லோ – வீக்கன் ஆன்மீகசபை நிர்வாகம் சார்பிலும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து நிற்கிறோம்.

அச்சத்துடனும், சஞ்சலத்துடனும், துயரத்துடனும் கடந்து வரும் ஒவ்வொரு நாளையும், எமக்கு நிறைவான நாட்களாக மாற்றத் தரவேண்டுமென யேசுபாலனை மனமுருகி வேண்டுவோம்.

நன்றி-
தமிழ் கத்தோலிக்க ஆன்மீகசபை
ஒஸ்லோ- வீக்கன். நிர்வாகம் © 2020