அறிவித்தல்

புதிய தகவல்

எமது அன்பான பங்குமக்களே!
நோர்வே சுகாதார அமைப்பினரின் விதிமுறைகளில் தொடர்ந்தும் தளர்வுகள் இல்லாமையால் தேவாலயத்தில் தமிழ்த் திருப்பலியை ஒப்புக்கொடுக்க முடியாத நிலையே தற்போதும் நீடித்து வருகிறது.
தற்போது கிடைக்கப்பெறும் செய்திகளும்,  செய்தி எதிர்வுகூறல்களும் எமக்கு சாதகமாகத் தென்படுவதாகத் தோன்றவில்லை. நோய்த் தொற்றின் வீச்சு சற்று குறைவடைந்து சென்றாலும், தலைநகரின் தொற்று நிலை திருப்திகரமாக இல்லை என்றே தெரியவருகிறது. எனவே சுகாதார விதிகளில் மாற்றம் ஏற்படும் வரையில் திருப்பலிகள் ஆலயங்களில் நிறைவேற்ற ஏதுநிலை இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய விதிமாற்றங்கள் கிடைக்கப் பெற்றதும் உடனடியாக உங்கள் அனைவருக்கும் அறியத்தருவோம்.
பாரிய அழிவுகளைத் தோற்றிவரும் இந் நோய்த்தொற்றால் துயருற்று துவண்டுபோயிருக்கும் அனைவரையும் உமது திருக்கரங்களால் ஆசீர்வதித்து, அருள் பொழிந்து, இக்கொடூர நோயில் இருந்து உலகையும் எம்மையும் மீட்டருள எல்லாம் வல்ல இறைவனை மனதுருகி வேண்டுவோம்.

நன்றி.
தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை
ஒஸ்லோ – வீக்கன்
நிர்வாகம்© 2021