அறிவித்தல்

அவசர வேண்டுகோள்

அன்பான பங்கு மக்களே!
தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகசபை நிருவாக உறுப்பினர் தேர்தல் ஏப்பிரல் 18ம் திகதி – 25ம் திகதி வரை இடம்பெறவுள்ளது அறிந்ததே.
நீங்கள் தேர்தலில் வாக்களிக்க  2020ம் ஆண்டிற்கான நிதிப்பங்களிப்பைச் செலுத்தியிருத்தல் அவசியம். இதுவரையில் நிதிப்பங்களிப்பைச் செலுத்தத் தவறியவர்களுக்கு இறுதிச் சந்தர்ப்பமாக மார்ச் மாதம் 31ம் திகதி வரை நிதிப்பங்களிப்பிற்கான கால எல்லையை நீடித்துள்ளோம்.
தேர்தல் பணிக்குழுவினர் முதற்தடவையாக இணையத்தில் இத்தேர்தலை நடாத்தவுள்ளதால், மார்ச் மாதம் 31ம் திகதிக்கு பின்னர் தம்மால் பதிவுகளை மேற்கொள்ள முடியாது என்ற தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனவே எமது ஆன்மீகத் தேவைகளை உணர்ந்து உங்கள் பங்களிப்பை எமது VIPPS : 28807அல்லது எமது வங்கி இல : 0539 53 90998 ற்கு 500 குறோனர்களைச் செலுத்தி உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு உரிமையோடு பங்குமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.
தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன்
நிருவாகம்© 2021