அறிவித்தல்

ஆழ்ந்த அஞ்சலிகள்

தனது வாழ்நாள் முழுமையையும் இறைவனுக்கே அர்ப்பணித்து ஏழைகளுக்காக வாழ்ந்து எம் இனத்தின் விடிவிற்காய் இடைவிடாது உழைத்த பெருமதிப்பிற்குரிய ஒய்வு பெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் இன்று 1ம் திகதி ஏப்பிரல் மாதம் பெரியவியாழனன்று இறைவனடி சென்றார். இவரது பேரிழப்பால் பரிதவிக்கும் அனைவருக்கும் ஆறுதலும் தேறுதலும் தந்திட எல்லாம் வல்ல இறைவனை இரைஞ்சி வேண்டுவதோடு, ஆயரின் இழப்பால் துயருறும் அனைவருக்கும் நோர்வே தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகம் ஆழ்ந்த அனுதாபத்தினைப் பதிவுசெய்து கொள்கின்றது.
”நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்தருளும் ஆண்டவரே முடிவில்லாத ஒளி அவர்கள் மீது ஒளிர்வதாக சமாதனத்தில் இளைப்பாறுவார்களாக”
ஆமேன்.

நன்றி –
தமிழ்க் கத்தோலிக்க
ஆன்மீகசபை
ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம்
© 2021