அறிவித்தல்

வருடாந்தப் பொதுக் கூட்டம்.

வருடாந்தப் பொதுக் கூட்டம் 08.08.2021

பேரன்புமிக்க பங்கு மக்களே!

ஒஸ்லோ – வீக்கன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீக சபையின் வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி பிற்பகல் 17.00 மணிக்கு இடம் பெறும் திருப்பலியைத் தொடர்ந்து இடம்பெறவுள்ளது என்பதை அறியத் தருகிறோம்.

தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா சட்டங்களுக்கு அமைவாக 130 பக்தர்கள் ஆலயவழிபாடுகளில் கலந்து கொள்ள முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆயினும் வருடாந்தப் பொதுக் கூட்டம் நடந்த திட்டமிடப்பட்டுள்ள மண்டபத்தில் அனைவரும் கூடுவதற்கான சட்டவிதிகள் சார்ந்து ஆராய்ந்து வருகிறோம்.

தற்போதைய சட்டவிதிகளில் மேலும் தளர்வுகள் வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதால், காலத்தை தெடர்ந்தும் நீட்டிச் செல்லாது மரியாஹோல்ம் அன்னையின் திருவிழாவைத் தொடர்ந்து வரும் வாரமான 08.08.21 ஞாயிறு அன்று வருடாந்தப் பொதுக் கூட்டத்தைக் கூட்டுவதோடு, புதிய நிருவாகப் பொறுப்பேற்றலும் இடம் பெறும் என்பதை அறியத்தருகிறோம். இது தொடர்பான உறுதியான தகவல்களை காலக்கிரமத்தில் அறியத்தருகிறோம்.

கொரோனா நுண்கிருமியின் கோரத் தாண்டவத்தில் இருந்து உலகத்தையும் உலக மக்களையும் மீட்டுஇரட்சித்திட எல்லாம் வல்ல இறைவனை நோக்கி எமது மன்றாடங்களைச் சமர்ப்பிப்போம்.

நன்றி –

தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம் © 2021