நித்திய நகர் உரோம் நோக்கிய யூபிலி ஆண்டுக்கான யாத்திரை 2025
நித்திய நகர் உரோம் நோக்கிய யூபிலி ஆண்டுக்கான யாத்திரையில் எமது ஆன்மீக பணியக இறைமக்களுடன்.
புனித அசிசியார் வாழ்ந்த இடம் அவரின் மடம், அவரோடு பேசிய சிலுவை, அவர் ஜெபித்த சிற்றாலயம் அசிசி மலை, அங்கு அவரின் கல்லறை, கல்லறையில் மேல் தளத்தில் திருப்பலி புனித கிளாராவின் மடம் என்பன முதல் நாளும் அங்கு உள்ள புனித கதவு வழியாக நுழைந்ததும் இன்னும் அடுத்த நாள் வத்திக்கான் பேதுரு பெருங்கோவில் அங்கு புனித கதவு வழியாக நுழையும் போது வழிபாடு பின்னர் புனித பேதுரு கல்லறை அருகே திருப்பலி நிறைவில் புனித 16ம் பெனடிக் அவர்களுடைய கல்லறை 2ம் யோண் பவுல் அவர்களுடைய கல்லறை மைக்கல் ஆஞ்சலோவின் பெரும் ஓவியங்கள், வியாகுலமாதா சிற்பம் பின்னர் வத்திக்கான் சதுக்கத்திலிருந்து கொலோசேயம் வரையிலான தூரமான நடைப்ப யணத்தில் நிறைய வரலாற்றுப் பகுதிகள் இத்தாலியின் ஒற்றுமைச் சின்னம், யூலியஸ் சிசரின் சிலை, புனித பிலிப்பு நேரியார் ஆலயம்,
ரோம் தரிசிக்க, தண்ணீர் ஊற்று, இறுதியாக கோலோசேயம் என நிறைவுற்றது. இறுதிநாளில் மூன்றாவதாக புனித வாயில் நுழைவு திருத்தந்தை பிரான்சிஸ் கல்லறை, புனித சதாசகாய மாதா புனித படம் உள்ள ஆலயம் தரிசிப்பு பின்னர் மாலையில் தூய பவுலின் பெருங்கோவில் அவரின் கல்லறை ஆலயம் 4வது புனித வாயில் நுழைவு என மொத்தம் 4 புனித கதவுகள் நுழையும் சந்தர்ப்பம் கிடைத்தது.
புனித பேதுரு கல்லறையில் ஒப்பு கொடுக்கப்பட்ட திருப்பலி முழு ஆன்மீக பணியக மக்களுக்குமாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
நன்றி.
Fr. D.E.Ratnaraj OMI