அறிவித்தல்

அறிவித்தல்கள்

[ tirsdag 22. desember 2020 15.58 ] Amarapala: யேசுபாலனின் பிறப்பை மகிழ்வுடன் நினைவுகூரக் காத்திருக்கும் எமது பங்கு மக்களே !

எம்மால் ஒழுங்கு செய்யப்பட்ட அனைத்துத் திருப்பலிகளும் ஏற்கனவே அறியத்தந்த அட்டவணைப்படி இடம் பெறும் என்ற தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதோடு எம்மால் கடைப்பிடிக்கப் படவேண்டிய சில விதிமுறைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள திருப்பலிகளில் நோர்வீஜிய சுகாதார அமைப்பினரின் அறிவுறுத்தல்கள் பிரகாரம், நாம் தொடர்பில் இருந்தவர்களோ அன்றேல் எமக்கோ காய்ச்சல் அல்லது தடிமன் அறிகுறிகள் இருப்பின் திருப்பலியில் பங்கேற்பதை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளுமாறு மிகப் பணிவுடன் வேண்டுகிறோம். நோய்த்தொற்று தொடர்பான சந்தேகம் இருப்பின் உங்களை முழுமையாகத் தனிமைப்படுத்துவதால், உங்களையும் சுற்றியிருக்கும் ஏனையவரையும் நோயிலிருந்து பாதுகாக்க முடியும். மேலும் சுகவீனம் காரணமாகவோ அன்றேல் பிற காரணிகளாலோ உங்களால் திருப்பலியில் பங்குபெற முடியாத சூழல் ஏற்படின், அதை விரைவாக எமக்குத் தெரியப்படுத்தின் உங்கள் இடத்தை பிறிதொரு நபருக்கு வழங்க எம்மால் ஆவன செய்யப்படும். தொடர்புகளுக்கு தொலைபேசி எண் :9413 8474

இவை தவிர நீங்கள் ஆலயத்தின் நுழைவாயிலில் உட்புகும் நேரம் முதல் திருப்பலி நிறைவடைந்து வீடு செல்லும் நேரம் வரையில் சமூக இடைவெளி (1meter avstand) கண்டிப்பாகக் கடைப்பிடித்தல் அவசியம். மேலும் ஆலயத்தில் உங்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட இருக்கையை விட வேறு இருக்கைகளைப் பயன்படுத்துவம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மேற்படி விதிகளை அனைவரினதும் சுயபாதுகாப்புக் கருதி விழிப்புணர்வோடு செயற்படுத்துமாறு எமது பங்குமக்களை அன்போடு வேண்டுகிறோம்.

இவ்வருடம் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரணச் சூழலிலும் எமக்கு யேசுபாலனின் பிறப்புத் திருப்பலி உட்பட ஏனைய திருப்பலிகளிலும் பங்குபெறும் அரியதோர் வாய்ப்பை நல்கிய அருட்திரு ஜெகத், அருட்திரு பிராங்கிலின் ஆகிய இருவருக்கும் எமது சிரம் தாழ்த்திய நன்றிகளைக் கூறி, ஆலைய வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியாத எமது உறவுகளுக்காகவும் யேசுபாலனை இரைஞ்சி வேண்டுவோம்.

நன்றி-
தமிழ் கத்தோலிக்க ஆன்மீகசபை
ஒஸ்லோ- வீக்கன்.
நிர்வாகம் © 2020