அறிவித்தல்

திருப்பலி 30.05.2021 பிற்பகல் 17.00

எமது பேரன்புக்குரிய பங்கு மக்களே!

நீண்டதோர் இடைவெளியின் பின்னர் எதிர்வரும் 30.05.21 ஞாயிறு பிற்பகல் 17.00 மணிக்கு புனித யோகானஸ் ஆலயத்தில் தமிழ்த் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் என்ற மகிழ்வான தகவலை அறியத்தருகிறோம்.

ஒஸ்லோ மாநாகர விதிகளுக்கு அமைய இடம்பெறும் திரும்பலியில் 20 பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். billett.katolsk.no என்னும் இணைய முகவரியில் எதிர்வரும் 29.05.21 சனி மதியம் 12.00 மணிக்குப் பின்னர் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்பதை எமது பங்குத் தந்தை TAN அவர்கள் அறியத்தந்துள்ளார்.

திருப்பலியானது கொரோனா விதிகளுக்கு அமைய ஒப்புக் கொடுக்கப்படும். மேலும் திருப்பலியில் பங்குகொள்ள முடியாத பக்தர்களுக்காக நேரடி ஒளிபரப்புப் செய்யப்படும் என்பதையும் தெரிவித்து நிற்கிறோம்.

நன்றி –

தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம் © 2021